இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு தரண், அவர்களிடம் போனில் பேசியபோது, நிதி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் கோவையிலிருந்து பஸ்சில் கோபி வந்தனர். அவர்களுக்காக தரண் பைக்குடன் பஸ் நிலையத்தில் காத்திருந்தார். கணவன், மனைவி வந்ததும் அவர்களிடம் சிறிது நேரம் தரண் வேலைபற்றி பேசிக் கொண்டிருந்தார்.
பின்னர் தரண், அந்தப் பெண்ணை மட்டும் தனது பைக்கில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். வேட்டைக்காரன் கோவில், கீழ்பவானி வாய்க்கால் பகுதிக்கு சென்றபோது தரண் பைக்கை நிறுத்தி யாரும் இல்லாத இடத்துக்கு அந்தப் பெண்ணை இழுத்துச்சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்தப் பெண்ணிடம் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக தரண் மிரட்டியுள்ளார். பின்னர் கொளப்பலூரில் பெண்ணை இறக்கி விட்டுள்ளார்.
அந்த பெண் நடந்தவற்றை அழுதுகொண்டே தனது கணவரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் கணவர் உடனடியாக கோபி போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் தரணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபி சிறையில் அடைத்தனர்.
The post வேலை வாங்கி தருவதாக கூறி காதல் திருமணம் செய்த நண்பர் மனைவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது appeared first on Dinakaran.