இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் சுகமதி மற்றும் குழந்தைகள் எழுந்து வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது பெரியம்மா, வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது, சுகமதி மற்றும் குழந்தைகள் இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 3 பேரையும் மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாகவும், விஷத்தினால் இறந்திருப்பதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து தேவூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
The post 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை appeared first on Dinakaran.