நாக்பூர்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் உமேஷ் யாதவ். இவர், கோராடியில் வசித்து வரும் தனது நண்பரான தாக்கரே(37) என்பவரை மேலாளராக பணியமர்த்தி உள்ளார். இந்நிலையில் உமேஷ்யாதவ் நிலம் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளார். அதற்காக ரூ.44 லட்சத்தை தனது வங்கிக்கணக்கில் இருந்து தாக்ரேவின் வங்கிகணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்ட மேலாளர் தாக்ரே, தனது பெயரிலேயே அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்துள்ளார்.