புதுடெல்லி: அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறை தலைவர்கள் மற்றும் மத்திய காவல் படை தலைவர்களின் ஆண்டு மாநாடு, கடந்த 2014ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி நடத்தி வருகிறார். இதன்படி 2022ம் ஆண்டுக்கான மாநாடு டெல்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு 3 நாள் நடக்கிறது. இதில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.