கொள்ளிடம்: மயிலாடுதுறை அருகே நாய்கள் துரத்தி கடித்ததால் வீட்டிற்குள் புகுந்த புள்ளிமானை வனத்துறையினர் மீட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் ஊராட்சியை சேர்ந்த செங்கமேடு கிராமம் கொடிக்கால்வெளி தெருவில் நேற்று அதிவேகமாக ஓடி வந்த 3 வயதான புள்ளி மானை, அந்த பகுதியில் உள்ள நாய்கள் ஒன்று சேர்ந்து துரத்தி, துரத்தி கடித்தன. இதனால் பயந்து போன புள்ளிமான், நாய்களிடமிருந்து தப்பித்து வேகமாக பாய்ந்து ஓடி கொடிகால்வெளி தெருவில் உள்ள ஒரு குடிசை வீட்டிற்குள் புகுந்தது. இதனை பக்குவமாக அங்குள்ளவர்கள் வீட்டுக்குள்ளே வைத்து பாதுகாத்தனர்.