சென்னை: உலகம் முழுவதும் 10 நாடுகளில் 300 ஷோரூம்கள் என்கிற தனது வலுவான நெட்வொர்க்கால் உலகின் 6வது மாபெரும் சில்லறை ஆபரண வர்த்தக நிறுவனமாக விளங்கும் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் 300வது உலகளாவிய ஷோரூம் திறப்பு விழா, அமெரிக்காவின் டல்லஸ் நகரில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. காலின் நகரின் கவுண்டி கமிஷனரான சூஸன் ப்ளெட்சர் மற்றும் டெக்சாஸ் நகரின் மேயர் ஜெப் செனே ஆகிய இருவரும் மலபார் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் (சர்வதேச செயல்பாடுகள்) ஷாம்லால் அகமது முன்னிலையில் ஷோருமை திறந்து வைத்தனர். மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி.அகமது, துணைத்தலைவர் கே.பி.அப்துல் சலாம், இந்திய செயல்பாடுகளின் நிர்வாக இயக்குனர் ஓ.அஷர் மற்றும் குழும நிர்வாக இயக்குனர் மற்றும் பி2பி ஏ.கே.நிஷாத் உள்ளிட்ட பலர், குழும உறுப்பினர்கள், நலம் விரும்பிகள், பிற விருந்தாளிகள் காணொலி காட்சி மூலம் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.