பல்லடம்: பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் கணவன்-மனைவி கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள அனுப்பட்டி ஊராட்சி வேலப்பகவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரேடியேட்டர் திருட்டு சம்பவம் நடந்தது. இதை திருடியதாக மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த பாண்டி என்பவர் மகன் கருப்புசாமி (29) என்பவரை காமநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 45 நாட்கள் சிறையில் இருந்த கருப்பசாமி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடாமலும் நீதிமன்றத்தில் ஆஜராகாமலும் இருந்து வந்ததார். இதனால் கருப்புசாமிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.