வள்ளியூர் ரயில்வே தரைப்பாலத்தில் அரசு பேருந்து சிக்கியது

நெல்லை: நெல்லையில் கனமழை எதிரொலியாக வள்ளியூர் ரயில்வே பாலத்தில் தண்ணீர் தேங்கியது. வள்ளியூரில் இருந்து ராதாபுரம் செல்லும் சாலையில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு 65 பேருடன் சென்ற பேருந்து வள்ளியூர் ரயில்வே தரைப்பாலத்தில் சிக்கியது. தண்ணீரில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து 40 பயணிகளை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

The post வள்ளியூர் ரயில்வே தரைப்பாலத்தில் அரசு பேருந்து சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: