நீர்ப்பிடிப்பு பகுதிகளான தூவாணம் அணை, ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதிகளில் மழை பெய்யும்போது சுருளி அருவியில் நீர்வரத்து ஏற்படும். பொதுவாக அருவியில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருக்கும். கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் நீர்வரத்து குறையும். ஆனால், இந்தாண்டு போதிய மழை இல்லாமல் கடந்த ஏப்ரல் முதல் அருவியில் நீர்வரத்தின்றி வறண்டது. இதனால், அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை கொட்டியதால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியாக குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்கின்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘கோடை மழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வரத்தும் அதிகரித்துள்ளது.
கும்பக்கரையில் குளிக்க அனுமதி
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இதன் நீர்பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், வெள்ளக்கெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 5 நாட்களாக பெய்த கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கடந்த 2 நாட்களாக அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது. இந்த நிலையில், நேற்று நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானது. இதையடுத்து இன்று காலை முதல் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: கும்பக்கரையில் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.