சென்னை: ஆதித்யா பிர்லாவின் கிளை உரிமம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.82 கோடி மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், சென்னை முகப்பேரில் வசிப்பவர் பிரதிக் (32). இவர், தனக்கு மும்பையில் உள்ள ஆதித்யா பிர்லா நிறுவனத்தில் உயர் அதிகாரிகளை தெரியும். அவர்கள் மூலம் அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளான லூயி பிலிப், ஆலென்சோலி, வேன்ஹுசைன் போன்ற கடைகளுக்கான கிளை நடத்த உரிமம் வாங்கித் தருகிறேன் என்று கூறினார். இதை நம்பி கடந்த 2019ம் ஆண்டு பல்வேறு தவணைகளில் ரூ.2 கோடியே 82 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தேன். அதை தொடர்ந்து ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் லோகோ, சீல், துணை தலைவரின் கையெழுத்துடன் கூடிய உரிமத்தை தயார் செய்து ெகாடுத்தார். ஆனால், அவர் போலியான உரிமம் கொடுத்தார் என்பதை கண்டுபிடித்து விட்டேன். இதனால், அவரிடம் பணத்தை திருப்பிக் கேட்டேன்.