டீ வியாபாரியை அடித்து சித்ரவதைசெய்த புகாரில் பழனி காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு..!!

பழனி: டீ வியாபாரியை அடித்து சித்ரவதைசெய்த புகாரில் பழனி காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராகி விளக்கம் தர கோர்ட் ஆணையிட்டுள்ளது. டீ வியாபாரி முகமது அலியின் மனைவி பவுசியா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இளம்பெண்ணை கேலி செய்ததாக டீ வியாபாரியை தாக்கிய வழக்கில் எதிர்மனுதாரராக காவல் ஆய்வாளர் சேர்க்கப்பட்டார். தாக்குதலில் காயமடைந்த டீ வியாபாரிக்கு முறையான சிகிக்சை வழங்க ராஜாஜி மருத்துவமனைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: