திருமகன் ஈவெரா மறைவு ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு

சென்னை: காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மரணமடைந்ததையொட்டி, ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளது என தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு முறைப்படி கடிதம் மூலம் தெரிவித்தார். தமிழக அரசின் கடிதத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Related Stories: