மும்பை: டெல்லி அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும், ரிஷப் பண்ட் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தலைவரும், இந்திய கிரிக்கெட் வீரருமான ரிஷப் பந்த், கடந்த மாதம் தனது காரில் சென்றுகொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதில் அவருக்கு பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பந்த் தற்போது மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.