டொராண்டோ: கனடாவின் யூகோன் பிரதேசத்தின் 10வது பிரதமராக கேரளாவை சேர்ந்த அமைச்சர் ரஞ்ச் பிள்ளை ஜனவரி 14ம் தேதி பதவியேற்க உள்ளார். கேரளாவை சேர்ந்தவர் ரஞ்ச் பிள்ளை. இவர் கனடாவில் உள்ள யூகோன் லிபரல் கட்சியின் தலைவராக கடந்த ஜன.8ம் தேதி தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து யூகோன் பகுதி பிரதமராக ஜன.14ம் தேதி பதவி ஏற்க உள்ளார். இதுபற்றி ரஞ்ச் பிள்ளை வெளியிட்டுள்ள டிவிட்டில்,’ யூகோன் லிபரல் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதில் நான் பெருமையும் பணிவும் அடைகிறேன். நாங்கள் பெருமைப்படுவதற்கு நிறைய இருக்கிறது.