துபாய்: ஈரானில் ராணுவ படையை சேர்ந்த இரண்டு பேரை கொன்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 2 பேர் தூக்கிலிடப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானில் ஹிஜாப் அணியாத இளம்பெண் மாஷா அமினி போலீஸ் காவலின்போது மரணமடைந்தார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அங்கு ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் போராட்டங்களை ஒடுக்குவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. போராட்டக்காரர்கள் 517 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 19,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.