திருப்பத்தூர் : கர்நாடகாவில் இருந்து திருப்பத்தூருக்கு காரில் மதுபானம் கடத்திய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெளிமாநில மதுபானங்கள் பரவலாக விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கலால் ஆணையர் பானுவுக்கு புகார் வந்தது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின்பேரில், கலால் ஆணையர் பானு, போலீசார் திருப்பத்தூர் அடுத்த கந்திலி நரியநேரி கூட்ரோடில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பதிவு எண் இல்லாமல் வந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.