திருப்பூர்: திருப்பூரில் 3 வயது சிறுவன் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் பிச்சம்பாளையம் அடுத்துள்ள குருவாயூரப்பன் நகர் பகுதியில் சேர்ந்தவர் பிரகாஷ் (29). சொந்தமாக கம்ப்ரசர் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வஞ்சிக்கொடி. இவர்களது மகன் சஞ்சய் (3). நேற்று முன்தினம் மதியம் சஞ்சய் பிஸ்கட் சாப்பிட்டுவிட்டு உறங்கினார். மாலை நீண்ட நேரம் ஆகியும் படுக்கையில் இருந்து எழவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வஞ்சிக்கொடி, மகன் சஞ்சயை எழுப்பினார்.