பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் பலி: திருப்பூரில் பரிதாபம்

திருப்பூர்: திருப்பூரில் 3 வயது சிறுவன் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் பிச்சம்பாளையம் அடுத்துள்ள குருவாயூரப்பன் நகர் பகுதியில் சேர்ந்தவர் பிரகாஷ் (29). சொந்தமாக கம்ப்ரசர் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வஞ்சிக்கொடி. இவர்களது மகன் சஞ்சய் (3). நேற்று முன்தினம் மதியம் சஞ்சய் பிஸ்கட் சாப்பிட்டுவிட்டு உறங்கினார். மாலை நீண்ட நேரம் ஆகியும் படுக்கையில் இருந்து எழவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வஞ்சிக்கொடி, மகன் சஞ்சயை எழுப்பினார்.

அப்போது அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சஞ்சையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சஞ்சய் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: