புதுச்சேரி: மஞ்சள் கொத்து, கருணை கிழங்கு, சிறுவள்ளிக்கிழங்கு சாகுபடிக்கு புதுச்சேரி அரசு மானியம் தராததால் பெரும் இழப்பை சந்தித்து வருவதாக அம்மாநில விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி புதுச்சேரி அடுத்த மண்ணாடிபட்டி, திருக்கனூர் உள்ளிட்ட கிராமங்களில் 100ஏக்கர் வரை மஞ்சள் சாகுபடி செய்வது வழக்கம். ஆனால் பயிர்களை காக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்காததால் தற்போது 2 ஏக்கர் மட்டுமே மஞ்சள் பயிரிட படுவதாக உழவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.