கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக கையெழுத்து பிரசாரம்

புதுடெல்லி: டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லி மக்கள் தங்களது முதல்வரை நேசிக்கிறார்கள் என்பதை பாஜவிற்கு உணர்த்தும் வகையில் கையெழுத்து பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் தங்கள் கருத்தை கூறி கையெழுத்திடுவார்கள். இந்த கையெழுத்துக்கள் பாஜவிற்கு அனுப்பப்படும் என்று ஆம் ஆத்மியின் ஜாங்புரா எம்எல்ஏ பிரவீன் குமார் கூறி உள்ளார்.

The post கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக கையெழுத்து பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: