இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த 50,000க்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றனர். அங்கு இயல்பு நிலை திரும்பி விட்டதாக ஒன்றிய அரசு கூறினாலும், அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மெய்டீஸ் ஆதிக்கம் செலுத்தும் பிஷ்ணுபூர் பகுதிக்கும், குக்கி ஆதிக்கம் நிறைந்த சுராசந்த்பூருக்கும் இடையே உள்ள இம்பால் இனக்கலவரத்துக்கு முன்பு வரை இரு சமூகத்தினர் வசிக்கும் பகுதியாக இருந்தது.
தற்போது அங்கு குக்கி இன மக்கள் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்தால் சிலர் அண்டை நாடான அசாமுக்கும், மிசோரமுக்கும் குடிபெயர்ந்து விட்டனர். இதுபோன்ற சூழலில் தாயை அல்லது தந்தையை பிரிந்து வாழும் குழந்தைகள் தங்கள் பெற்றோர் இருவருடனும் சேர்ந்து வாழ முடியாத சோகம் ஏற்பட்டுள்ளது.
The post மணிப்பூரில் இனக்கலவரம் இன்று ஓராண்டு நிறைவு appeared first on Dinakaran.