சண்டிகர்: பஞ்சாபில் சர்வதேச எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானை சேர்ந்த நபர் எல்லைப்பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில், எல்லைப்பாதுகாப்பு படையினர் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். குருதாஸ்பூரின் அஜ்னலா செக்டாரில் காலை 8 மணியளவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய பிராந்தியத்திற்குள் மர்ம நபர் ஊடுருவ முயற்சிப்பதை வீரர்கள் கண்டறிந்தனர்.