மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கடற்கரையில் 2 ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர். ஆஸ்திரேலியாவின் கோல்ட் கடற்கரை பிராந்தியத்தின் வடக்கு பகுதியில் தீம் பார்க் அமைந்துள்ளது. இது பிரபலமான சுற்றுலாதளமாகும். இங்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செல்வார்கள். இந்நிலையில் நேற்று பிற்பகல் கடற்கரை பகுதியில் ஒரு ஹெலிகாப்டர் புறப்பட தயாரானபோது மற்றொரு ஹெலிகாப்டர் தரையிறங்கியது. இதனால் இரண்டு ஹெலிகாப்டர்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் ஒரு ஹெலிகாப்டர் சேதமடைந்த நிலையில் மற்றொன்று பாதுகாப்பாக தரையிறங்கியது.