போர் நிறுத்தத்துடன் பிணை கைதிகளை விடுவிக்கும் வகையிலான செயல் திட்டத்தை இஸ்ரேல் வகுத்துள்ளதாக தெரிவித்த அதிபர் பைடன், இது குறித்து ஹமாஸ் அமைப்புக்கு கத்தார் அரசு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். முதலில் 6 வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை அமல்படுத்தவும் பின்னர் காசா போன்ற பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகளை திரும்பப் பெறவும், பிணைக் கைதிகளை விடுவிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் வேண்டும் என கூறிவரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் இந்த போர் நிறுத்தம் ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும் எனவும் ஜோ பைடன் கேட்டுக்கொண்டார்.
The post இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல் appeared first on Dinakaran.