செய்யாறு: செய்யாறில் மதுபாட்டில் விற்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் மொபட்டில் சென்ற பெண், காரை ஏற்றி கொலை செய்யப்பட்டதாக அவரது கணவர் போலீசில் புகார் செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன், வெங்கட்ராயன்பேட்டை சேட் நகரை சேர்ந்தவர் முருகன்(45), நெசவு தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி(39), நேற்று காலை 7 மணியளவில் மொபட்டில் செய்யாறு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த கார், மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த விஜலட்சுமி, செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
