வேளச்சேரியில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன், பணம் கொள்ளை

வேளச்சேரி: வேளச்சேரி, வ.உ.சி. நகர் பிரதான சாலை, அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர் கண்ணன் (40). சாப்ட்வேர் கம்பெனி ஊழியர். இவர் கடந்த 23ம் தேதி சொந்த ஊரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் சென்றார். இந்நிலையில் நேற்றிரவு வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதாக பக்கத்து வீட்டில் வசிப்பவர், கண்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே கண்ணன், தனது உறவினர் வேணுகோபாலுக்கு தகவல் தெரிவித்து பார்க்கும்படி கூறியுள்ளார். உடனே அவரும், வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.27,000 கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் சென்று  ஆய்வு செய்தனர்.

     

மேலும் கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார் என அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் கீழ் தளத்தில் சந்தோஷ் என்பவர் வீட்டிலும் கொள்ளை முயற்சி நடத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வீட்டின் உரிமையாளர் சந்தோஷ் அமெரிக்காவில் வசிக்கிறார். அவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: