வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்காட்டை சேர்ந்தவர் செல்லத்துரை(45). இவர், கடந்த மார்ச் மாதம் கோடியக்கரையில் உள்ள நூர்முகமது என்பவரது வீட்டில் காஸ் சிலிண்டர் திருடியதாக புகார் கூறப்பட்டது. அவரை பிடிக்க கோடியக்காட்டில் உள்ள வீட்டுக்கு இன்ஸ்பெக்டர் குணசேகரன், போலீஸ்காரர்கள் ராஜ்அய்யப்பன், சக்திவேல் ஆகியோர் நேற்று அதிகாலை சென்றனர். உடனே செல்லத்துரை, அவரது மனைவி ராணி(40), மகன் வீரக்குமார்(25), மகள் கலிப்பிரியா(20) மற்றும் செல்லத்துரையின் தாய் பார்வதி(70) ஆகியோர் சேர்ந்து, இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீஸ்காரர்களை கட்டை, கற்களால் தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டர் குணசேகரனின் மண்டை உடைந்ததோடு, அவரது வலது கை மூட்டு இறங்கியது.