அரை நிர்வாண காட்சியில் நடித்த ஐஸ்வர்யா தத்தா

சென்னை: தமிழில் வெளியான ‘பச்சை என்கிற காத்து’, ‘மெர்லின்’, ‘எட்டுதிக்கும் பற’ ஆகிய படங்களை இயக்கிய கீரா இயக்கியுள்ள புதிய படம், ‘இரும்பன்’. இதில் எம்.ஜி.ஆர் பேரன் ராமச்சந்திரன் என்கிற ஜூனியர் எம்.ஜி.ஆர், ஐஸ்வர்யா தத்தா, யோகி பாபு, சென்ராயன் நடித்துள்ளனர். லெனின் பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, காந்த் தேவா இசை அமைத்துள்ளார். இப்படத்தில் ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’, ‘பாயும் புலி’, ‘சத்ரியன்’, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’, ‘காஃபி வித் காதல்’ ஆகிய படங்களில் நடித்திருந்த ஐஸ்வர்யா தத்தா, ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்துள்ளார். அதோடு, ஒரு காட்சியில் அரை நிர்வாணமாகவும் நடித்துள்ளார்.

இதுகுறித்து கீரா கூறுகையில், ‘நரிக்குறவ சமுதாய இளைஞனுக்கும், ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. ஆனால், பெண்ணை சன்னியாசியாக்க குடும்பத்தினர் விரும்புகின்றனர். அவளும் அதை ஏற்கிறாள். ஆனால், சன்னியாசத்தை விட குடும்ப வாழ்க்கையே மேன்மையானது என்பதைப் புரியவைக்க, அவளை நடுக்கடலுக்கு அழைத்துச் செல்கிறான் காதலன். அப்போது நடுக்கடலில் படகில் நடக்கும் சம்பவங்கள்தான் படம். இப்பயணத்தில் அவர்கள் ஒரு தனி தீவுக்குச் செல்கிறார்கள். அவர்கள் ஒரே ஆடையில் இருப்பதால், அதை அவிழ்த்து உலர்த்த வேண்டியிருக்கும்.

இது இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு காட்சியில் மேலாடையின்றி அரை நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா தத்தாவிடம் விளக்கினோம். இதற்கு முதலில் அவர் சம்மதிக்கவில்லை. ‘வட சென்னை’ படத்தில் ஆண்ட்ரியா நடித்தது உள்பட பல ரெபரென்ஸ்களை சுட்டிக்காட்டிய பிறகு நடிக்க ஒப்புக்கொண்டார்’ என்றார்.

Related Stories: