லாரி மோதி பெண் பலி

பூந்தமல்லி: சென்னை சூளைமேடு, பத்மநாபன் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ஆனந்தி (48). இவர், நேற்று மதுரவாயலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில், பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே நடந்து சென்றபோது, பின்னால் வேகமாக வந்த லாரி இவர்மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த  அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், அவர் ராணிப்பேட்டையை சேர்ந்த  லாரி டிரைவர் கணேசன் (49) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories: