ஓசூர்: ஓசூர் மாநகரை பசும்சோலைவனமாக மற்ற மியவாகி காடுகளை வளர்க்கும் முயற்சியில் தொண்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்னர் குளிர்ந்த காற்றுடன் இதமான தட்ப வெப்பம் நிலவிய ஓசூரில் மக்கள் தொகை பெருக்கம், தொழில் துறை வளர்ச்சியான காடுகள் பரப்பளவு குறைந்து சீதோஷண நிலை மாறிவிட்டது. புகை, காற்றுமாசு, வெப்பமயமாதலில் இருந்து நகரங்களை காக்க மியவாகி எனப்படும் குறுங்காடுகளை வளர்க்கும் முறை தற்போது பிரபலம் அடைந்து வரும் நிலையில், ஓசூர் இளைஞர்களும் அந்த முயற்ச்சியை விட்டுவைக்கவில்லை. தரிச காட்டுப்பூவே, என்ற அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு ஓசூர் நகர பகுதிகளில், சுமார் 4000 அடியில் மியவாகி காடுகளை அமைத்து வருகின்றனர்.