வர்தா புயல், தானே புயல், போன்ற இயற்கைசீற்றத்தின்போது கட்டிடம் சிதிலமடைந்து சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு தற்போது இழுந்துவிழும் நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்வதற்கு மாணவர்கள், பொதுமக்கள் அச்சப்படு கின்றனர். ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வராமல் சாலையிலேயே ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை வைத்துவிட்டு செல்லும் நிலையுள்ளது. எப்போது இடிந்துவிழுமோ என்ற அச்சத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், ஊராட்சி செயலாளர் ஹரி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். எனவே, பெரிய ஆபத்து ஏற்படுவதற்குள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் திருவள்ளூர் கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
The post இடிந்து விழும் நிலையில் ஊராட்சிமன்ற அலுவலகம்; அச்சத்தில் பன்பாக்கம் கிராம மக்கள் appeared first on Dinakaran.