காத்மாண்டு: உலகையே உலுக்கிய பல கொலைகளை செய்த சர்வதேச குற்றவாளி சார்லஸ் சோப்ராஜ் நேபாள சிறையில் இருந்து விடுதலையானார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சார்லஸ் சோப்ராஜ் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலைகளை செய்துள்ளார். இந்தியா, நேபாளத்தில் கொலை, கொள்ளை குற்றங்களில் தொடர்புடைய இவர், வெவ்வேறு நாடுகளுக்கு தப்பியோடினார். அவர் மீது பல்வேறு நாடுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 1975ம் ஆண்டு அமெரிக்க பெண் கொலை வழக்கில் கடந்த 2003 ஆம் ஆண்டு சோப்ராஜை நேபாள காவல்துறை கைது செய்தது. நேபாள நீதிமன்றம் சார்லசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.