டெல்லி : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாஜ்மஹாலை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. சீனா மற்றும் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாட்டின் மிக பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றான தாஜ்மஹால், ஆக்ராவில் உள்ளது. ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட நாடுமுழுவதும், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கைகளில் வருகை தருவது வழக்கமான ஒன்று. கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு தாஜ்மஹாலை பார்வையிட வரும் மக்களுக்கு கொரோனா சோதனை அளிக்க வேண்டும் என்று உத்தரவு அளித்ததை அடுத்து தொற்றுநோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கை எடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த சோதனை தொடங்கியுள்ளதகவும்.