வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது வழக்கு தொடர பரிந்துரைக்கப்பட்டதால், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த கேபிடல் ஹில் வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால் டிரம்புக்கு எதிராக வழக்குத் தொடர, இவ்வழக்கை விசாரித்து வந்த விசாரணை குழு பரிந்துரைத்துள்ளது. அதனால் வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பிய டிரம்ப்க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.