சான் பிரான்சிஸ்கோ: சமூக ஊடகமான டுவிட்டரை வாங்கிய உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், அவ்வப்போது பரபரப்பு பதிவுகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று, ‘டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா? என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று வாக்களிக்க வேண்டும்’ என்று டுவிட்டர் பயனர்களை கேட்டுக் கொண்டார். மேலும் அடுத்த 12 மணிநேர வாக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில் எனது நடவடிக்கை இருக்கும் என்றும் தெரிவிருத்திருந்தார்.