கரூர் மாவட்ட ஊராட்சி து.தலைவர் தேர்தலை நாளை நடத்த உத்தரவு

மதுரை: கரூரைச் சேர்ந்த திருவிகா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவராக இருந்த தனுஷ் (எ) முத்துக்குமார் 2021ல் ராஜினாமா செய்தார். எனவே துணைத்தலைவர் பதவிக்கான காலியிடத்திற்கு ஓய்வு நீதிபதி மூலம் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என  கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலை டிச.19ல் (நாளை) நடத்தலாம். இதனை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கையும் நடத்தலாம். ஆனால், மறு உத்தரவு வரும் வரை முடிவை வெளியிடக் கூடாது. தேர்தல் விவரத்தை டிச.22க்கு முன்னதாக சீலிடப்பட்ட கவரில் அறிக்கையாக தாக்கல் செய்யும்படி தெரிவித்தனர்.

Related Stories: