சென்னை,: சாலிகிராமம் குடியிருப்பு பகுதியில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 3 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை சாலிகிராமம், பாஸ்கர் நகர், பாரதிதாசன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக வளசரவாக்கம் உதவி கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மேற்கண்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சாதாரண உடையில் கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர்கள் பலர் அந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் அதிரடியாக அந்த வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தினர்.