மாண்ட்ரியல்: உலகளாவிய இயற்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இந்தியாவின் கங்கை தூய்மை திட்டத்தை அங்கீகரித்து ஐநா பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பு பாராட்டியுள்ளது. கனடாவில் மாண்ட்ரியல் மாகாணத்தில் ஐநா.வின் பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பின் 15வது உச்சி மாநாடு கடந்த 7ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டப்படும் இந்த உச்சி மாநாடு, கொரோனா பரவல் காரணமாக கடந்த 4 முறையாக ஒத்திவைக்கப்பட்ட பிறகு தற்போது நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் உலகளாவிய அளவில் இயற்கையை மீட்டெடுக்கும் 10 முயற்சிகளை ஐநா அங்கீகரித்துள்ளது. இதில் இந்தியாவின் கங்கை தூய்மை திட்டமும் ஒன்றாகும்.