மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 24,100 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
அதேசமயம் மேட்டூர் அணைக்கு நேற்று காலை 8 மணிக்கு விநாடிக்கு 11,600 கனஅடியாகவும், 9.30 மணியளவில் விநாடிக்கு 21,600 கனஅடியாகவும் இரவில் 23,500 கனஅடியாகவும் நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 24,100 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து அணை நிரம்பிய நிலையில் உள்ளது.