நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை: மழை தொடர்வதால் ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவு

நீலகிரி: தொடர்மழை காரணமாக நீலகிரி மாவாட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சிலர் இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் தடை பட்டுள்ளது. குறிப்பாக குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் மட்டும் 5 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அந்த வழித்தடத்தில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அம்பிகாபுரம், டி.டி.கே. சாலை, இந்திரா நகர், வண்டிசோலை, உள்ளிட்ட இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் மரங்களை அகற்றி சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தொடர்மழை காரணமாக குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: