சென்னை: ஆன்லைன் ரம்மி ஒரு அறிவுப்பூர்வமான விளையாட்டு என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத் குமார் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் அந்த கட்சி சார்பில் போதைப்பொருளை ஒழிக்கவும், முழு மதுவிலக்கை அமல்படுத்தவும் வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் நடுவே பேட்டியளித்த நடிகர் சரத்குமார்; நான் கூறிய ரம்மி விளையாடுகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். தமக்கு வாக்களிக்குமாறு கேட்டால் யாரும் அளிப்பதில்லையே என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்த நாள் முதல் அந்த விளம்பரத்தின் நான் நடிப்பதில்லை என்றும் சரத்குமார் விளக்கம் அளித்தார்.