அம்பத்தூர்: அம்பத்தூரில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அம்பத்தூர் பகுதியில் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அம்பத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அம்பத்தூர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, கருக்கு மெயின் ரோடு, மேனாம்மேடு அருகே உள்ள கருப்பன் குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர், கையில் பையுடன் சுற்றித்திரிந்தார்.