நாகர்கோவில் ரயில் நிலையத்தில் சென்னை பயணி திடீர் மரணம்: குடும்பத்தினர் கதறல்

நாகர்கோவில்: சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இன்று காலை சுமார் 5.25க்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இந்த ரயிலில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் சுருண்டு விழுந்து மயங்கினார். இதை பார்த்த மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள், போலீசாரும் விரைந்து வந்தனர்.

ரயில்வே டாக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் வந்து பரிசோதனை செய்தார். அப்போது தான் அந்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரிடம் இருந்த உடமைகளை சோதனை செய்தனர். அதன் மூலம் இறந்தவர் குமரி மாவட்டம் நடைக்காவு பகுதியை சேர்ந்த லூக்காஸ் (52) என்பது தெரியவந்தது.

இவர் சென்னையில் உள்ள பிரபல வணிக நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். உடல் நிலை சரியில்லாமல், ஊருக்கு கிளம்பி வந்துள்ளார். இந்த நிலையில் தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரிய வந்தது. தகவலறிந்து அவர்களின் குடும்பத்தினர் வந்து லூக்காஸ் உடலை பார்த்து கதறி அழுதனர்.

Related Stories: