சேலம்: சேலத்தில் போலி கூட்டுறவு சங்கம் நடத்தி வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்ட கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் முத்துவிஜயா, சூரமங்கலம் குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், சூரமங்கலம் பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனியில் மாவட்ட நெசவாளர் மற்றும் துணிநூல் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் செயல்படுகிறது. அந்த சங்கம், கூட்டுறவுத்துறையின் அனுமதி ஏதும் பெறாமல், விதிமுறைகளை பின்பற்றாமல் போலியாக இயங்குகிறது.