திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மாண்டஸ் புயல் தாக்கத்தால் 500 ஏக்கரில் இருந்த வாழை மரங்கள் முறிந்தன. 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் சேதமுற்றதால் 1 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மாண்டஸ் புயல் காரணமாக ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் சூறை காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. இதில் ஆரணி அருகே சந்தவாசல், படவேடு, புஷ்பகிரி, வெள்ளூர் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் காற்றில் முறிந்தன.