அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் ம.கவுதமன் ஆஜராகி, அமலாக்கத்துறையால் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில் ஒரு சில ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளன என்றார். அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யும் சூழல் உள்ள நிலையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 91ன்படி ஆவணங்களைக் வழங்க கோரி மனுக்களை தாக்கல் செய்ய முடியாது என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தல்ல.
இந்த வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் மனுக்களை தாக்கல் செய்து வருகிறார்கள் என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, செந்தில் பாலாஜி மனுக்கள் மீது ஜூன் 14ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கிடையே, புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவலை வரும் 14ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
The post குற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் உள்ள வங்கி அதிகாரிகள் விவரம் கோரிய செந்தில் பாலாஜி வழக்கில் 14ல் தீர்ப்பு appeared first on Dinakaran.