லாரி மோதி் எஸ்ஐ பலி

மல்லசமுத்திரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் ரங்கராஜ் (58). இவர் எலச்சிபாளையம் காவல்நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில், பணியை முடித்துக்கொண்டு ரங்கராஜ், ராசிபுரம் நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வையப்பமலையில் சாலையோரம் லாரி ஒன்று எந்தவித சிக்னலும் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்தது. இதனை கவனிக்காத ரங்கராஜ், எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த ரங்கராஜூக்கு பரிமளா(51) என்ற மனைவியும், வினோதினி, நந்தினி என்ற மகள்களும் உள்ளனர்.

Related Stories: