ஜாலவார்: ராஜஸ்தானில் நடை பயணத்தின் போது மோடி.. மோடி.. என கூச்சலிட்டு வெறுப்பேற்றிய பாஜக தொண்டர்களை நோக்கி ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார். இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, தனது பயணத்தின் ஒருபகுதியாக ராஜஸ்தான் மாநிலம் ஜாலவார் மாவட்டம் வழியே நடந்து சென்றார். அங்கிருந்து பாஜக அலுவலகம் வழியாக அவர் நடைப்பயணத்தை மேற்கொண்ட போது அந்த அலுவலகத்தின் மாடியில் இருந்து பாஜக நிர்வாகிகள் மோடி.. மோடி.. என்று குரல் எழுப்பினர். அவர்களை பார்த்து ராகுல் காந்தி, பறக்கும் முத்தம் கொடுத்தார்.