அண்ணாநகர்: அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்டர் (38). இவர், அண்ணாநகர் 4வது மெயின் ரோட்டில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி இரவு, இவரது கடைக்கு போதையில் பட்டா கத்தியுடன் வந்த 5 பேர், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர், தர மறுத்ததால் சரமாரியாக தாக்கியதோடு, கத்தியால் வெட்ட முயன்றனர். பின்னர், அவ்வழியாக சென்ற பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளை வெட்ட முயன்றனர்.