மாநில தடகள போட்டியில் வெற்றி பள்ளி மாணவருக்கு பாராட்டு

ராஜபாளையம்: மாநில தடகள போட்டியில் வெற்றி பெற்று 2வது இடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருவண்ணாமலையில் மாநில அளவிலான தடகள போட்டி நடந்தது. இதில் ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர் வசந்தகுமார் கலந்து கொண்டார். இவர் போல்வால்ட் எனப்படும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதலில் வெற்றி பெற்று 2வது இடம் பிடித்தார். ஊர் திரும்பிய மாணவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 பள்ளி செயலாளர் பாலாஜி, தலைவர் லட்சுமண், உப தலைவர் ஜெய் கணேஷ், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தர்மராஜ் மற்றும் உறவின்முறை தலைவர் ராமசாமி, பொருளாளர் ராதாகிருஷ்ணன், செயலாளர் கள்ள கொண்ட ராஜன், கணக்கர் முத்தையா ஆகியோர் வரவேற்று ஊர்வலமாக மேளதாளங்களுடன் அழைத்து வந்தனர். பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தலைமை ஆசிரியை பேச்சியம்மாள் மாணவரை பாராட்டி பேசினார்.

Related Stories: