ராஜபாளையம்: மாநில தடகள போட்டியில் வெற்றி பெற்று 2வது இடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருவண்ணாமலையில் மாநில அளவிலான தடகள போட்டி நடந்தது. இதில் ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர் வசந்தகுமார் கலந்து கொண்டார். இவர் போல்வால்ட் எனப்படும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதலில் வெற்றி பெற்று 2வது இடம் பிடித்தார். ஊர் திரும்பிய மாணவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.