லண்டன்: ஜனநாயகம் குறித்து இந்தியாவுக்கு யாரும் பாடம் எடுக்க அவசியமில்லை என ஐ.நாவில் இந்தியா தெரிவித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் டிசம்பர் மாதத்திற்கான தலைமைப் பொறுப்பு நேற்று இந்தியா வசம் வந்தது. அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ருச்சிரா காம்போஜிடம் இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து பதிலளித்த இந்தயாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ்; உலகிலேயே இந்தியா தான் முதலில் நாகரீமடைந்த நாடு. இந்தியா பழம்பெருமை வாய்ந்த தேசம். இந்திய ஜனநாயகத்தின் வேர்கள் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது.